இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Tuesday, December 21, 2010

கணவனுக்கு கள்ள காதலனின் கிட்னி

சிங்கபூர் இன் ஆங்கில பத்திரிகை யில் 18-12-10 தேதி(STRAITS TIMES) இல் வந்த  பதிப்பு, நம் தினத்தந்தி மற்றும் பல முன்னணி தமிழ் பத்திரிக்கைக்கு இணையான செய்தி இந்த பத்திரிகையில் இது மாதிரி ஒரு செய்தி பார்த்தது இல்லை. அந்த அளவு காரம்.




தொழிலதிபர் வயது 40 களின்      மத்தியில் ,   முத்திய நிலை கிட்னி கோளறு(RENAL DISEASEடாக்டர் புது கிட்னி மாற்ற வேண்டும் என்று சொல்லிட்டார் .தொழிலதிபரும்   அவரின்  மனைவியும்    இந்தியவிலும், சிங்கப்பூர் லும் கிட்னி வேண்டி  விளம்பரம் செய்கிறார்கள்.



நாட்கள் நகர்கின்றன, ஒரு நாள் மனைவி  ஒரு நண்பரை  கணவரிடம் அறிமுகம் செய்து வைக்கிறார் இவர் என்னுடைய பழைய பள்ளி  
நண்பர் எனக்கு அண்ணன் மாதிரி  என்று அறிமுகம்
செய்கிறார் இவர் தன்னோட கிட்னி யை உங்களுக்கு தானம் 
தர சம்மதிக்கிறார்.தொழிலதிபருக்கு ஒரே சந்தோஷம்!
கும்புட போன தெய்வம் குறுக்க வந்தது மாதிரி.



தொழிலதிபர்    சிங்கப்பூர் இல்   பீர் ,  விஷ்கி ,  பிராந்தி     மற்றும்
 குளிர்பானங்கள் மொத்த விற்பனையாளர் நிறைய பணம் சம்பாதிக்கிறார்
 நல்லவசதியான வழக்கை.இவர் தன் மனைவியை நான்கு ஆண்டுகள் காதலித்து 2002 ம்ஆண்டுஇருவரும்   திருமணம்   செய்து கொண்டார்கள் ,
 நன்கு ஆண்டுகள் கழித்து 2006 இல் ஒரு அழகிய பெண்  குழந்தை,
வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்தது இடை இடைய 
சிறு சிறு உடல் கோளாறுகள் கணவருக்கு. 2008  இல் டாக்டர் கிட்னி யை மற்ற வேண்டும் சொல்லி விட்டார்! கிட்னி மாற்ற முடியாவிட்டால் தினத்தோறும் டையலிசிஸ் செய்ய வேண்டும்.இதனால் தொழில் பதிக்கபடும் எப்படியாவது கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று  வேண்டிகொண்டார்.



கடவுள் மாதிரி மனைவியின்  நண்பர் தானம் செய்யமுன்வருகிறார் ,
இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது  இவர் அவ்வளவாக  வசதி இல்லை மத வருமானத்தை நம்பி உள்ளவர்.



தொழிலதிபர் இவருக்கு கைமாறு நன்றிகடன் எதாவது செய்ய வேண்டும் என்று நிகிழ்கிறார்.நன்றி கடனாக பெரிய கடை 
ஒன்றை  லிட்டில் INDIA  வில் அதாங்க தேக்கா தண்ணி கடை
ஒன்றை ஏற்படுத்தி தருகிறார்.தேக்காவில் தண்ணி கடைதான்  
செம வியாபாரம் தமிழ்நாடு டாஸ்க் மார்க் லம்  கிட்டநிக்க முடியாதது  ஒவ்வொரு SUNDAY  வும் டாஸ் மார்க் தீபாவளி டார்கெட் டை விட
அதிகமாவே கல்லா நிரம்பும் நம்ம ஊர் சரக்கு(KF,KNOCKOUT,5000,6000) இங்க வந்த பிறகு  லோக்கல் பிரண்ட் மவுசு குறைஞ்சு (TIGER,CARLSBERG,HEINIKEN) விற்பனை கம்மி ஆய்ட்டு.அது என்னானு தெரியலை இந்தியாவில் இருந்தா வெளிநாட்டு சரக்கு! வெளி நாட்டுல இருந்தா உள்நாட்டு சரக்கு! இது இதுல மட்டும் இல்லை பொதுவா சீப்பு ,சோப்பு ,பவுடர்,தேங்காஎண்ணை,ஊறுகாய் அதுலயும் இன்னும் ஒன்னு இருக்கு  ஊர்லேய்ருந்து செறுப்பு கொண்டுவந்து  போட்டுக்கிறது முடியலை சாமி!!!
  சுதேசி கொள்கை (BE INDIAN BUY INDIAN)




சரி நாம மேட்டருக்கு வருவும் தொழிலதிபருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை   வெற்றிகரமாக முடிந்தது     மருத்துவரின்    ஆலோசனையில் கொஞ்ச நாள்  நல்ல ஓய்வில் இருக்கிறார்.
இந்த கால   கட்டங்களில்  தொழிலை மனைவியும்  அவரின் நண்பரும்
பார்த்துக்கொள்கிறார்கள்.


கிட்னி தானம் கொடுத்தவர் தொழிலதிபரின் வீட்டுக்கு அடிக்கடி வந்து போவதும் இங்கு தங்கதுவதுமாக இருந்து இருக்கிறார்
அப்போதெல்லாம் இந்த நடவடிக்கை ஒன்றும் சந்தேகத்தை தரவில்லைஆனால் தன் மனைவியுடன் இவர்   இரவு நேரங்களில்
 வெளியில் சுற்றுவதும் லேட்டாக இருவரும் வீட்டுக்கு வருவதும். மனைவி தனைவிட   நண்பர்   மேல்   அதிக  அக்கறை   காட்டுவதுமாக இருக்கையில் தொழிலதிபருக்கு எங்கையோ  கருகுற வாடை அடிச்சி
 இறுக்கு.


 இது சம்பந்தமாக தொழிலதிபருக்கும் மனைவிக்கும் இடைய வாக்குவாதம் வருகிறது  அமைதியாக இருந்த வீட்டில் தினந்தோறும் சண்டை ,இதுபோல் என்னை சந்தேகபட்டால் நான் வீட்டை விட்டு
எங்கேயாவது குழந்தையுடன் போய்விடுவேன் என்று மிரட்டுகிறார்
ஒரு நாள் அதே போல் செய்தும்விடுகிறார்.


தொழிலதிபர் மனைவியின் தங்கையிடம் தொடர்புகொண்டு அவரின் இருப்பிடத்தை தெரிந்துகொள்கிறார் ,இந்த காலகட்டத்தில் அவருக்கு
பல  அதிர்ச்சியான உண்மைகள் தெரிய வருகிறது! எந்த
ஆண்மகனாலும் கேட்க்க முடியாதா! கூடாத அதிர்ச்சிகள் !!!








அதிர்ச்சி 1


அவர்கள் இரண்டு பேருக்கும் இடையில் நீண்ட நாள் தொடர்பு கிட்னி கொடுத்தவர்தான் மனைவியின் ஆசை நாயகன்.


அதிர்ச்சி 2 


அந்த குழந்தைக்கு அப்பா இவர் கிடையாது(BIOLOGICAL FATHER) குழந்தையின் மரபணு  சோதனையில் உண்மை தெரிய வருகிறது.


குழந்தையை அளவுக்கு அதிக பாசமாக வளர்த்து இருக்கிறார் ,
இதற்கிடையில் வீட்டை விட்டு  போன மனைவி இவர் விட்டுக்கு திரும்ப வருகிறார், இந்த நிகழ்வுகளுக்கும் இடையிலும்  குழந்தை மேல்
 உள்ள பாசத்தால் விட்டிகிற்க்குள் எற்று கொள்கிறார்




ஒரு நாள் பக்கத்துக்கு வீட்டிலிருந்து தொலைபேசி  அழைப்பு வருகிறது
மனைவியும் ஆசை நாயகனும் ஒன்றாக வீட்டில் இருப்பதாக .அந்த
நேரத்தில் இவர் தொழில் முனைப்பாக லொறியில்(சிங்கப்பூர் இல் லாரியை இப்படி தான் கூப்பிடுவார்கள்) இவரின் டிரைவருடன் சரக்கு கடைகளுக்கு 
சரக்கு  விநியோகித்துக்கொண்டிருந்தார். அப்படிய டிரைவரை வீட்டுக்கு  
அனுப்பி விட்டு பின்னாடி இருந்த  விஷ்கி யை ராவாகுடிக்கிறார் இருடி
முண்டை வாரேன் இன்னக்கி ஒண்ணுல ரெண்டு பார்க்கிறதுன லொறியை
எடுக்கிறார் ரோட்டு டிராபிக் சிக்னல் எதையும் மதிக்கலை  DRIVE AGINST TRAFFIC FLOW  வீட்டுக்கு வருகிறார் இவரின் வீடு CONDO அங்குள்ள
செக்யூரிட்டி வண்டியை அதற்க்கு உரிய இடத்தில பார்க் பன்ன சொல்கிறார்  அவருடன் சண்டை போடுகிறார் செக்யூரிட்டி க்கு   ஆதரவாக  மூன்று  நபர்கள் 
 வருகிறார்கள்அவர்கள்  மிது  லொறியை விட்டு ஏற்றி கொல்வதாக மிரட்டி
அங்கும் இங்கும் ஓட்டுகிறார்  அங்கு உள்ள பொருட்களை சேதபடுத்த
 கடைசியாக மதில் சுவற்றில் முட்டி வண்டி நிக்கிது.


போலீசில் வழக்கு பதிவாகி ஆறு மாதம் சிறை தண்டனையும் $3,500 அபராதமும் விதிக்கபடுகிறது .இந்த தண்டனைக்கு எதிராக
அப்பிள் செய்து $ 15,000  பெயிலில் வெளிய வந்து இருக்கிறார்


இவரின் வக்கீல் கருணை மனு கேட்டு விண்ணப்பித்துள்ளார் இத்தனைக்கும் காரணம் திருமண பந்தத்தில் ஏற்பட்ட பிரச்சனைதான் கரணம் என்று,
வழக்கு விசாரணையில் உள்ளது.


இத்துணைக்கும் காரணமான மனைவி என்ன சொல்கிறார்


நீங்களே தமிழ்ல் மொழி பெயர்த்துகொள்ளுங்கள்


She told The Straits Times news paper that the daughter was a result of a "one-night-stand" with him around 2006.
She said she had turned to him because she and her husband did not share physically affectionate relationship.
Thereafter,she said,she did not contact the man.she did not tell him that he had fathered her child and
neither did she tell her husband at first.இது கணவர் சொல்வதற்கு மாறாக உள்ளது.


இந்த ஸ்டோரி  யை ஆங்கிலத்தில் முழுவதும் படிக்க பத்திரிக்கை நிருபரின் வலைபூ இங்கே சொடுக்கவும்  









5 comments:

  1. காலம் கலிகாலம் என்பது சரியாகத்தான் இருக்கிறதோ !

    ReplyDelete
  2. நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

    ReplyDelete
  3. இதை எப்படி சொல்வது! அவர் இப்படி நினைத்திருக்கலாம் குழந்தை கொடுத்தோம், கிட்னி கொடுத்தோம் ஏன் அதையும் குடுக்ககூடாது?

    ReplyDelete
  4. word verification ய் நீக்கி விட்டேன், நன்றி பனித்துளி சங்கர்

    ReplyDelete